சென்னை: எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புகளை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.