×

பொன்னேரி அருகே மகள் மரணத்தில் சந்தேகம்: போலீசில் தந்தை புகார்

பொன்னேரி: பொன்னேரி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் கண்ணன் (40). இவர், பஞ்செட்டியில் நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஊத்துக்கோட்டை, காமராஜர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் காவ்யா (26) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பொன்னேரி அருகே தனது மகளின் வீட்டுக்கு ரமேஷ் வந்திருக்கிறார். அப்போது மகள் வீட்டில் இல்லாததால் விசாரித்தார். அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருப்பதாக தெரியவந்தது. பின்னர் மருத்துவமனையில் ரமேஷ் வந்து பார்த்தபோது, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காவ்யா சேர்க்கப்பட்டு, அங்கு இறந்து போனது தெரியவந்தது.

தனது மகளின் மரணத்தில் சந்தேகமான தந்தை ரமேஷ், இதுகுறித்து நேற்று மாலை பொன்னேரி போலீசில் புகார் அளித்தார். அப்புகாரில், தனது மகளுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அவரை கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இப்புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் குடும்பத்தினரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Bonneri , Ponneri, suspect in daughter's death, father complains to police
× RELATED சென்னை, பொன்னேரியில் ரயிலில் அடிபட்டு 4 பேர் பலி