×

1537 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: எம்எல்ஏக்கள் வழங்கினர்

திருவொற்றியூர்: சென்னை மாதவரம், திருவொற்றியூர் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 1537 மாணவ-மாணவிகளுக்கு நேற்று மாலை தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர் வழங்கினர். சென்னை மாதவரம், செயின்ட் ஆனீஸ் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் கனிமொழி தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, 337 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதேபோல் திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, மணலி அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் வெள்ளையன் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் பிளஸ் 2 படிக்கும் 1200 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை கே.பி.சங்கர் எம்எல்ஏ பங்கேற்று வழங்கினார்.

இதில் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.எஸ்.நாகலிங்கம், வி.ராமநாதன், கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், திமுக நிர்வாகிகள் வாசு கருணாநிதி, சைலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLAs gave free bicycles to school students
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...