×

சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் நேற்று என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருந்தது, என்.ஐ.ஏ சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. நேற்று கைது செய்த பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் 8 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : National Intelligence Agency ,Chennai , Armed police guard the National Intelligence Agency office in Chennai
× RELATED தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக...