×

23 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று இந்தியா சாதனை

கேன்டர்பரி: இங்கிலாந்தை 2வது ஆட்டத்தில் வென்றதின் மூலம் 23  ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா  மகளிர்  ஒருநாள் தொடரை இங்கிலாந்து மண்ணில்   வென்று சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி இப்போது 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில்  7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 1-0என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. கேன்டர்பரியில் நடந்த 2வது  ஆட்டத்தில்,  முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 333ரன் குவித்தது.  இங்கிலாந்து தரப்பில் பந்து  வீசிய 5 வீராங்கனைகளும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து 334ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து  களமிறங்கியது.  இந்திய வீராங்கனைகள் 8 பேர் மாறி மாறி பந்து வீச, திணறிய  இங்கிலாந்தின் ஆட்டம் 44.2ஓவருக்கு 245ரன்னில் முடிவுக்கு வந்தது.  அதனால் இந்தியா 88 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இங்கிலாந்தின்  வியட்  65, கேப்டன் ஆமி ,  ஆலீஸ் ஆகியோர் தலா 39ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ரேணுகா சிங் 4,  ஹேமா தயாளன்  2 விக்கெட் எடுத்தனர்.  இந்த வெற்றியின் மூலம்  தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்தில் 1999ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா  ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.  இந்த 2 அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை லண்டனில் நடக்கிறது.


Tags : India , India won the series after 23 years, a record
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...