×

தமிழகத்தில் 51 இடங்களில் அக்.2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி: போலீசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு மனுதாரர்கள் தரப்பில், தமிழகத்தில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டது, ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறையின் அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும். ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,RSS ,HC , In 51 places in Tamil Nadu on October 2, RSS. Permission for procession: HC directs police
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...