×

உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டாமணியை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர்

சென்னை: உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள நகைசுவை நடிகர் போண்டாமணியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழ்நாடு சித்த மருத்துவப்பல்கலைகழக மசோதா என்பது சட்டபேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, மே மாதம் 5ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைகழக மசோதாவில் மாணவர் சேர்க்கை தொடர்பான விளக்கம் கோரி கடிதம் எழுதப்பட்டது. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து விரிவான பதில் அனுப்பட்டுள்ளது. ஆளுநர் விரைந்து அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் போண்டாமணி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிறுநீரக பிரச்னை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. போண்டா மணிக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்படும். குடும்பத்தினர் சிறுநீரகம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உறுப்பு மாற்று மையத்தில் பதிவு செய்யவேண்டும். முதல்வர்  நலம் விசாரிக்க அறிவுறுத்தினார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.

Tags : minister ,Bondamani , The minister met Bondamani, who was admitted due to ill health, and inquired after his well-being
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...