×

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தொடர்புடைய வழக்கு இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து
செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் 2018-ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு. இதையடுத்து, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Former Minister ,S. B. Velumani ,Madras High Court , Former Minister S. B. Velumani case final hearing adjourned to October 12: Madras High Court
× RELATED வேட்புமனுவுடன் மருத்துவ பரிசோதனை...