பந்தலூர்: பந்தலூர் அருகே கிளன்ராக் காப்பி காடு பகுதியில் தாய் யானையிடம் இருந்து பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீண்டும் தாயிடம் சேர்த்தனர். நீலகிரி மாவட்டம் தேவாலா வனச்சரகம் பந்தலூர் அருகே கிளன்ராக் காப்பிக்காடு வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று காப்பி காடு பகுதியில் நிற்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தேவாலா வனச்சரக ரேஞ்சர் சஞ்ஜீவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டி யானையை பார்த்தனர். தாயிடம் இருந்து பிரிந்து உணவு இல்லாமல் கலைப்புடன் இருப்பதை அறிந்து அதற்கு தண்ணீர் கொடுத்து கொடுத்தனர்.