×

மாவட்டச் செயலாளர் தேர்தலுடன் மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக 15வது பொதுத் தேர்தலில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகரத் தேர்தல்கள் முடிவுற்றதை தொடர்ந்து, நடைபெற உள்ள மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில், மாவட்டக் கழக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, மாவட்டக் கழகத்திற்கென ஒரு அவைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணைச் செயலாளர்­கள் மூன்று பேர்(கட்டாயமாக ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர்

மகளிராகவும் இருத்தல் வேண்டும்) ஆகிய அலுவலளர்­களையும்; கழக நிர்வாக வசதிக்கேற்ப பிரிக்­கப்பட்ட தத்தமது மாவட்டக் கழகத்தில் எத்தனை சட்டமன்றத் தொதிகள் உண்டோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, அத்தனை தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும் அதை போலவே, மாவட்டக் கழகத்தில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் உண்டோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தொகுதிக்கு இரண்டு பொதுக்குழு உறுப்பினர்கள் வீதம், (மாவட்டத்தில் உள்ள பொதுக்குழுவில் கண்டிப்பாக ஒருவர் மகளிராக இருத்தல் வேண்டும்) மாவட்டக் கழகப் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் தேர்தலுடன் மாவட்ட அமைப்புகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது.

Tags : General Secretary ,Duraymurugan , District Secretary Election, District Organization Election, General Secretary Duraimurugan Announcement
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...