×

தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக். 1 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் 1 முதல் 10 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் மற்றும் கோவையில் இருந்து தினமும் அக்டோபர் 5 வரை பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தசரா பண்டிகை முடிந்து ஊர் திரும்பிட ஏதுவாக அக்டோபர் 6 முதல் 10 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்கள் அறிவிப்பின்படி குலசேரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில். வரும் 01.10.2022 முதல் 04.10.2022 வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர். குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் குலசேரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருத்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக. 06.10.2022 முதல் 10.10.2022 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.


Tags : Kulasekharapatnam ,Dussehra festival ,Minister ,Sivashankar , Kulasekharapatnam ,occasion of Dussehra festival, Special Bus Operation, Minister Sivashankar Information
× RELATED தூத்துக்குடி, திருச்செந்தூர்,...