×

நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

கொழும்பு: நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை 8 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து நேற்று காலை 87 விசை படகுகளில் 400க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் அவர் உள்பட 8 பேர் 22 நாட்டிகள் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி விஜி, தினேஷ், ரஞ்சித், பக்ரிசாமி, கமல், புளுகு கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் மீனவ கிராம மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.


Tags : Pudukottai ,Nedundivu ,Navy , Nedundivu, Pudukottai Fishermen, Prisoners, Sri Lankan Navy
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...