×

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகு சவாரி செய்து குதூகலம்

புவனகிரி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. மாங்குரோவ் காடுகள் எனப்படும் சுரபுன்னை மரங்களைக் கொண்ட இந்த வனப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். பிச்சாவரத்தின் காட்டுப் பகுதிக்குள் செல்லும் ஆற்றில் படகு சவாரி செய்வது அலாதியான ஆனந்தத்தை தரும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பிச்சாவரம் சுற்றுலா மையம் பயணிகள் நிறைந்து காணப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் காட்டுப்பகுதிக்கு சென்ற பயணிகள் காட்டின் அழகையும், சுரபுன்னை செடிகளின் நேர்த்தியான வளர்ச்சியையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் பிச்சாவரம் நேற்று களை கட்டியது.



Tags : Pichavaram , Tourists throng Pichavaram: Enjoy boat rides
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...