×

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக கோரி தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை : ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக கோரி ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் தற்பொழுது தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபாரில் நடைபெற உள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்றால், அது ராகுல் காந்திதான் என்று தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அவர்கள் வரவேண்டும் என்று கே.எஸ்.அழகிரி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது. தெளிவான, நீண்ட நெடிய பார்வை கொண்ட ராகுல் காந்தி மீது காங்கிரஸ்காரர்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் பெறுப்பேற்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.     


Tags : Raquel Gandhi ,Congress ,Tamil Nadu , Rahul, Gandhi, Congress, President, Resolution, Implementation, KS Alagiri, Speech
× RELATED மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய...