×

உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன் பணம் திருடிய மர்ம நபர்-சிசிடிவி கேமராவில் பதிவு

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் முருகன் மகன் ரங்கநாதன். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிகொண்டு இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவைகளை நள்ளிரவில் திருடி சென்றார்.

நேற்று காலை இதுகுறித்து இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் ஆனந்த் வீட்டிற்குள் முட்டி போட்டபடி மாடியில் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ரங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Ulundurpet , Ulundurpet: Murugan's son Ranganathan lives in Annai Satya Street, Ulundurpet Municipality, Kallakurichi District.
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...