×

உசிலம்பட்டி அருகே பழமையான கோயிலில் சிலை திருட்டு: போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு பழமையான விநாயகர் சிலையை கொண்ட கோயில் தான் இந்த திருட்டு நடந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் கருவறையில் இருந்த 3 அடி உயர விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளன. காலையில் விநாயகரை வழிபட கோயிலுக்கு வந்த கிராம மக்கள் விநாயகர் சிலை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சில்லாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தில் நடந்த சிலை திருட்டு சம்பவம் சுற்று வட்டார மக்களையும் அதிர்ச்சியடைவைத்துள்ளது.



Tags : Uzilampatti , Usilampatti, Statue, Theft, Police, Investigation
× RELATED உசிலம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க இடம் ஆய்வு