×

நகை கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37,056க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,632க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ.62க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. அதாவது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. அதன் பின் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனையானது.

இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக கடந்த  சனிக்கிழமையன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரன் ரூ.112 குறைந்து ரூ.37,120-க்கும், கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,640-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே  விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக நேற்றைய தினம் ஞாயிறு கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறை. அதனால், தங்க விலையில் மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் விற்கப்பட்டது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் மக்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37,056-க்கும், கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,632-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ.62-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை சரிந்திருப்பது  இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Chennai , Jewellery, shop, people, chennai, gold, price, decrease, sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...