×

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் ஏ.ஜி.பாபு தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜியாகவும்,  செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும் நியமித்துள்ளனர். மேலும் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) மாற்றப்பட்டுள்ளார்.

தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார்  சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராகவும், குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராகவும்  (தலைமையிடம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : 6 IPS officers transferred
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...