- அர்ஹத்
- கொரோனா
- ஆற்காடு
- அன்பு
- ஆரணி பாளிக்கோட்டை தெரு, திருவண்ணாமலை மாவட்டம்
- ஆர்கோட் டீட்ஸ் அலுவலகம்
- தின மலர்
ஆற்காடு: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் அன்பு (48). இவர் ஆற்காடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். கொரோனாவுக்கு சார்பதிவாளர் பலியான சம்பவம் பத்திர பதிவு அலுவலக ஊழியர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. …
The post கொரோனாவுக்கு ஆற்காடு சார்பதிவாளர் பலி appeared first on Dinakaran.