×

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 17 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: காவல்துறை அதிரடி.!

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 17 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 312  குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. ஒரு வாரத்தில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2022 முதல் 16.09.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 181  குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 77 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 42 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி, என மொத்தம் 312  குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் குற்றவாளிகள் 1.அருணாச்சலம், வ/25, த/பெ.மாறன், டாக்டர் அம்பேத்கர காலனி குடிசைப்பகுதி, கே.கே.நகர், சென்னை என்பவர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி என 5 குற்ற வழக்குகள் உள்ளது. 2.கார்த்திக், வ/24, த/பெ.முருகேசன், E பிளாக், நொச்சி நகர், மயிலாப்பூர் என்பவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக, E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
    
மேற்படி குற்றவாளிகள் அருணாச்சலம் மற்றும் கார்த்திக் ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 12.09.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிஷோர், வ/24, த/பெ.வெங்கடேசன், பி.வி.காலனி 9வது தெரு, வியாசர்பாடி, சென்னை என்பவர் வழிப்பறி குற்றச் செயலில் ஈடுபட்டதால், P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 4.முத்து (எ) தேசமுத்து, வ/22, த/பெ.தேசக்கண்ணு, காசிபுரம் 1வது தெரு, காசிமேடு, சென்னை 5.தினேஷ்குமார் (எ) தினேஷ், வ/27, த/பெ.குப்பன், இந்திராநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, காசிமேடு, சென்னை ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தொடர்பாக, N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகள் கிஷோர், தேசமுத்து, தினேஷ்குமார் ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 3 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 13,09,2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 3 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

6.ஜாகீர் உசேன், வ/57, த/பெ. சுல்தான், எண்.25/2, அசுதிகான் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 7.நாசர், வ/52, த/பெ.வைசூல் கருனை, எண்.34/2, அப்பாவு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 8.நூருல் அமீன், வ/39,                    த/பெ. முகமது சித்திக், எண்.9, பாலாஜி நகர் முதுல் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 9.அசாருதீன், வ/39, த/பெ.நாவஸ்கான், எண்.5/4, வல்லப்ப அக்ரஹாரம், திருவல்லிக்கேணி, சென்னை 10.முகமது சுல்தான், வ/54, த/பெ.முகமது அலி, எண்.57,  3வது மெயின் ரோடு, மின்ட் மாடர்ன் சிட்டி, பழையவண்ணாரப்பேட்டை 11.சுனைத் அலி, வ/42, த/பெ. ஆதாம் ஷா, எண்.22/10, தக்ருதீன்கான் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை ஆகிய 6 நபர்களும் சேர்ந்து 2 கிலோ மெத்தம்படைமைன், 2 கிலோ எபிட்ரின் போதை பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக  B-1  வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

12.சரவணன், வ/30, த/பெ.ஜெகநாதன், எண்.382, என்.எஸ்.கே.நகர், அரும்பாக்கம், சென்னை என்பவர்  ஈடுபட்டதற்காக ம13.அரவிந்த் (எ) அரவிந்த் ராஜ், வ/25, த/பெ. த/பெ.பிரகாஷ், எண்.328, 17வது தெரு, என்.எஸ்.கே.நகர், அரும்பாக்கம், சென்னை 14.ரஞ்சித், வ/26, த/பெ.பிரகாஷ், எண்.328, 17வது தெரு, என்.எஸ்.கே.நகர், அரும்பாக்கம், சென்னை ஆகிய  மூன்று நபர்களும் சேர்ந்து கடந்த 26.08.2022 அன்று அண்ணாநகர் பகுதியில் சந்தீப்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக K-4  அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

15,தட்சிணாமூர்த்தி, வ/22, த/பெ.கண்ணன், எண்.24,  மடுவன்கரை 1வது தெரு, ஆலந்தூர், சென்னை என்பவர் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்காக J-3  கிண்டி காவல் நிலையத்திலும், 16. சீனு (எ) பர்மா சீனு (எ) சீனிவாசன், வ/46, /பெ.இரையான், எண்.416, நாவலூர் தெரு, தண்டையார்பேட்டை சென்னை  என்பவர் H-3  தண்டையார்பேட்டை  காவல் நிலைய  சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார் இவர் மீது 54 வழக்குகள் உள்ள நிலையில் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக  S-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்திலும் 17. தனசேகர், வ/40, த/பெ.துரைசாமி, எண்.13, மரியம்மன் கோயில் தெரு, கம்பூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் என்பவர்  பணியிலிருந்த  இரயில்வே  பெண் போலீசாரை கத்தியால் தாக்கிய குற்றத்திற்காக எழும்பூர் இரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.   

மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஜாகீர் உசேன், நாசர், நுருல் அமீன், அசாருதீன்,  முகமது சுல்தான், சுனைத் அலி, சரவணன், அரவிந்த் (எ) அரவிந்ராஜ்,  ரஞ்சித், தட்சிணாமூர்த்தி, சீனு (எ) பர்மா சீனு (எ) சீனிவாசன், தனசேகர் ஆகிய 12 நபர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 12 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த நேற்று (16.09,2022) அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 12 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக்  காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 10.09.2022 முதல் 16.09.2022 வரையிலான ஒரு வார காலத்தில் 17 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர்,  கோயம்பேடு மற்றும் கீழ்பாக்கம் காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி என மொத்தம்  04  குற்றவாளிகள் கடந்த 10.09.2022 முதல் 16.09.2022 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Chennai , In the last one week in Chennai city, 17 criminals were arrested under the Gangster Detention Act: Police action.!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...