சென்னை: காப்பீடு, விமானம், தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை பிராந்திய மொழிகளில் வழங்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மையான சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இந்தியில் மட்டும் பேசுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை பிராந்திய மொழிகளில் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.