×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.36 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்: சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு  சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்த இன்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த திருச்சியை சேர்ந்த முகமது சையது (34), ராஜ் முகமது(35), கலீல் ரகுமான்(34) ஆகிய மூன்று பேர் கொண்டு வந்த பழைய துணிகள் அடங்கிய அட்டை பெட்டிகளை சோதனை செய்தபோது அதில் கட்டுகட்டாக வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மூன்று பேரை கைது செய்த அதிகாரிகள், அட்டைபெட்டிகளில் இருந்த அமெரிக்க டாலர், மலேசியன் ரிங்கட், சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நேற்றுமுன்தினம் இரவு பறிமுதல் செய்த பணத்தை நேற்று மாலை வரை எண்ணி மதிப்பீடு செய்ததில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் இந்திய ரூபாயில் 2.36 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Trichy airport ,Singapore , Rs 2.36 crore foreign currency seized at Trichy airport: 3 arrested for trying to smuggle to Singapore
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...