×

பூந்தமல்லி, சைதாப்பேட்டையில் 2 வாலிபர்கள் கொலை

சென்னை: பூந்தமல்லியில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வராண்டா பகுதியில் நேற்று காலை ரத்தவெள்ளத்தில் ஒருவர் இறந்துகிடந்தார். இதுபற்றி ஊழியர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, கொலையான நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொலை செய்தது யார் என விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்: சைதாப்பேட்டை ஜெயராமன் தெருவை சேர்ந்தவர் கோதண்டபாணி (36) இவரது மனைவி நிரோஷா (30). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கோடம்பாக்கத்தில் வசித்தபோது, அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்த மணிகண்டனுடன் (30) நிரோஷாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த கோதண்டபாணி, குடும்பத்துடன் சைதாப்பேட்டையில் குடியேறினார். ஆனாலும், இவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால், ஆத்திரமடைந்த கோதண்டபாணி, மணிகண்டனை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கோதண்டபாணி வீட்டிற்கு வந்த மணிகண்டன், கோதண்டபாணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை தேடி வருகின்றனர். …

The post பூந்தமல்லி, சைதாப்பேட்டையில் 2 வாலிபர்கள் கொலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli, Saitappettai ,CHENNAI ,Varanda ,Government Tuberculosis Hospital ,Poontamalli ,Saitapettai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!