×

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரை விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.10ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.


Tags : Quarterly Exam Holiday, Notice for School Students, School Education Department Notification
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு