சென்னை: டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஐதராபாத், பெங்களூரு உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான கொள்கையில் டெல்லி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.