சென்னை: சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வங்கக் கடலில் 360மீ உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. மாசு கட்டுப்பட்டு வாரியம் மற்றும் சுற்றுசூழல் அனுமதியைப்பெற்று அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க திட்டமிடப்ப்பட்டுள்ளது.