விருதுநகர்: விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நரிக்குறவர் மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி கூறினர். விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது அவர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தினார்.