×

குஜராத்தில் லிப்ட் அறுந்து 8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

அகமதாபாத்: குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக் கழகத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த கட்டிடத்தின் லிப்ட், நேற்று திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  முதல் கட்ட விசாரணையில், கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்தது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Gujarat ,PM Modi , 8 killed in lift collapse in Gujarat: PM Modi condoles
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...