×

டைரக்டர் பாலா ஆபீசில் தயாரிப்பாளர் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: இயக்குனர் பாலா தனக்கு 25 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் பாலா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். விக்ரம், சூர்யா உள்ளிடோர் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்தை எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் பி.ஏ.துரை என்பவர் தயாரித்திருந்தார். அந்த திரைப்படத்தை பாலா இயக்கினார். பிதாமகன் வெளியாகி விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்தது. அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் தயாரிப்பாளர் வி.ஏ. துரை, மீண்டும் ஒரு படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குநர் பாலாவிற்கு 25 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்குப் பிறகு பாலா மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக் கொடுக்குமாறு நேற்று தயாரிப்பாளர் வி.ஏ.துரை, இயக்குநர் பாலா அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு நாள் முழுவதும் பாலா அலுவலகத்தில் அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இரவு 10 மணி ஆனபோதும் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவில்லை. இந்த நிலையில் இயக்குநர் பாலா அலுவலக ஊழியர்கள் வி.ஏ.துரையை அலுவலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். அப்போது இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பிரச்னையை முடித்துக் கொடுப்பதாக வி.ஏ. துரைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Director Bala , Producer sit-in at Director Bala office
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...