சென்னை: விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறியும் சோதனை அக்.15 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. கொரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுபோதை சோதனை மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்துவிட்டதாலும் விமான சேவை முன்புபோல் இயல்புநிலைக்கு திருப்பிவிட்டதாலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.