×

கூடூர் ரயில் நிலையம் அருகில் ஆதரவின்றி அழுது கொண்டிருந்த தமிழக சிறுவர்கள் 2 பேர் மீட்பு

ஸ்ரீகாளஹஸ்தி : கூடூர் ரயில் நிலையம் அருகில் ஆதரவின்றி அழுது கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.
ஆந்திரமாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூர் ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் இரவு 2 சிறுவர்கள் ஆதரவின்றி அழுது கொண்டிருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் கூடூர் நகர போலீசார் அங்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டனர். தற்போது சிறுவர்களை நகர  போலீசார் பாதுகாப்புடன் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் சிறுவர்கள் குறித்து தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர்.

சிறுவர்களின் பெயர் சச்சின், சூரஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் தமிழில் பேசுகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து ரயிலில் வந்தபோது தொலைந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Kudur , Srikalahasti: Police rescued 2 boys from Tamil Nadu who were crying without support near Kudur railway station.
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...