மதுரை: அவரவர் தாய் மொழி அவரவர்க்கு உயர்ந்தது என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; எனது கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் அடர்னியா வெங்கடேசன் ஜி என்று விளித்திருக்கிறார். இந்தியில் பதில் எழுதக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியும் இப்படி தங்களின் இந்தி பற்றை காண்பிக்கிறார்கள். இனி நாமும் அவரை மதிப்பிற்குரிய Minister Smiriti Zubin Irani என்று விளித்து எழுதலாம். அவரவர் தாய் மொழி அவரவர்க்கு உயர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.