சென்னை: தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது எனவும் ஒருசில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.