×

இயக்கத்தில் எப்போதும் இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய 'மாமனிதன் வைகோ'ஆவணப்படம்: துரை வைகோ அறிக்கை..!

சென்னை: இயக்கத்தில் எப்போதும் இல்லாத மகிழ்ச்சியை மாமனிதன் வைகோ ஆவணப்படம் நிகழ்த்தியுள்ளதாக மதிமுக தலைமைக் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மறுமலர்ச்சி தி.மு.க துவங்கிய இந்த 29 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத மகிழ்ச்சியை கழகத் தோழர்களிடையே மாமனிதன் வைகோ ஆவணப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. ஊடகத்துறையினர் மற்றும் பொதுவான பார்வையாளர்களின் பாராட்டையும் ஆவணப்படம் பெற்று இருக்கிறது. இயக்கத் தந்தையும், இயக்கத் தோழர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த ஆவணப்படத்தை உருவாக்கினேன்.

சத்யம் திரையங்கில் வெளியிட்டதைப் போல, தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன். குறிப்பாக, இயக்கத் தோழர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பார்த்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொது மக்களின் பார்வைக்கும் படம் திரையிடப்படும். ஒவ்வொரு நகரத்திலும் படம் திரையிடப்படும்போது நானும் உங்களுடன் உடனிருப்பேன். ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்வில் பலருக்கும் படம் பார்க்க நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை என தோழர்கள் வருத்தப்பட்டார்கள். கட்சித் தோழர்கள் அனைவரும் பார்த்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.

ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் ஆவணப்படம் திரையிடப்படும். மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் வடக்கு தெற்கு ஆகிய மாவட்டங்களின் தோழர்கள் பார்த்து மகிழும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் புதூர் மு.பூமிநாதன் அவர்களின் ஏற்பாட்டில் வருகின்ற செப்டம்பர் 21 ஆம் தேதி எழிலார்ந்த இரண்டு திரையரங்குகளில் ஆவணப்படம் திரையிடப்பட இருக்கின்றது. அதைப்போல, சென்னையில் கழகத் தோழர்கள் பார்த்து மகிழும் வகையில் வடசென்னையில் மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராஜேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி காலையிலும், திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் கழகத் தோழர்கள் பார்த்து மகிழும் வகையில்,

திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நாகராஜ் அவர்களின் ஏற்பாட்டில், செப்டம்பர் 22 மாலையில் இரண்டு திரையரங்குகளில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. விரைவில், மற்ற நகரங்களிலும் திரையிடப்படும். கழகத் தோழர்களின் குடும்பங்கள் கண்டு மகிழும் வாய்ப்பை முழுமையாக உருவாக்குவேன். உங்களோடு உடனிருந்து உங்கள் மகிழ்வில் நானும் பங்கெடுப்பேன் இவ்வாறு கூறினார்.

Tags : 'Mamanidhan Vaiko' Documentary, which caused unprecedented joy in directing: Durai Vaiko's report..!
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...