×

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் கனமழை பெய்யலாம். நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் லேசான  மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூரில் - 17, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் - 12, பிரையர் எஸ்டேட் - 11, ஹாரிசன் எஸ்டேட் - 9  செ.மீ. மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் நாளை சூறாவளி வீச வாய்ப்புள்ளது. ஆந்திர கரையோரம், மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை சூறாவளி வீசக்கூடும். செப்டம்பர் 15, 16ல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கரையோரத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Meteorological Center , West direction, District 5, Kanamaha, Meteorological Centre
× RELATED மார்ச் 18-ம் தேதி தென் தமிழகத்தில்...