×

தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டை இளம் தலைமுறையினர் விளையாடுவது எப்படி? ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: முற்றிலும் தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டை இளம் தலைமுறையினர் விளையாடுவது எப்படி? ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது? என ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்ற பெண், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி முதல் தனது மகளை காணவில்லை. தனது மகள் ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி மற்றும் ஃபிரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை அதிக ஆர்வத்துடன் விளையாடி வருவாள்.

அந்த விளையாட்டுடன் சில ஆண் நண்பர்களுடன் பழகி, அந்த நண்பர்கள் தான் தனது மகளை கடத்தி இருக்க வேண்டும். எனவே தனது மகளை மீட்டுத்தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு ஐகோர்ட் கிளை நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, ஃபிரீ ஃபயர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள் தடை விதிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாக ஆகிறது. இருப்பினும், இளைஞர்கள், மாணவிகள் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாவதை ஏற்க இயலாது என நீதிபதி தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டு ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறினார். மேலும், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்து விரிவாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Tags : iCourt , ban,free fire game,online,icourt branch
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு