×

இரவில் பைக்கில் சாகசம் செய்த விவகாரம் 5 வாலிபர்களிடம் விசாரணை: ஐதராபாத் நபருக்கு வலைவீச்சு

சென்னை: இரவு நேரத்தில் பைக் சாகசம் செய்த விவகாரத்தில் போலீசார் 5 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனாம்பேட்டையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை ஆபத்தான முறையில் இளைஞர் குழுவினர் அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் செய்து வந்தனர். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது. அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் மூலம் இருசக்கர வாகன எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வீலிங்கில் ஈடுபட்டவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த 19 வயதுடைய முகமது ஹாரிஸ், முகமது சைபான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பிரபலமாக ஐதராபாத்தை சேர்ந்த பினோஜ் என்பவர் சென்னை அண்ணா சாலை வழியாக வருவதை அறிந்து அவரை பார்க்க சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் பினோஜ் அண்ணா சாலையில் பைக் சாகசங்களில் ஈடுபடும்போது அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும், அவருடன் இணைந்து தாங்களும் பைக் சாகசங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பைக் சாகசங்களின் ஈடுபட்ட பினோஜை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாகவும், தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட ராயப்பேட்டையை சேர்ந்த பிரோஸ் மாலிக் (19), பெரம்பூரை சேர்ந்த இம்ரான் அலிகான் (20), முகேஷ் (20) ஆகிய மூவரை பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Hyderabad , 5 teenagers interrogated in night bike adventure: Hyderabad man nabbed
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்