×

மாவட்ட வாள்வீச்சு போட்டி அகத்தியா பள்ளி மாணவர்கள் சாதனை: 40 பதக்கங்கள் வென்றனர்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டியில் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 40 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வாலாஜாபாத் அகத்தியா பள்ளி 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தினம் மற்றும் குடியரசுதின விழா விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரத்தில் நடந்தன. இதில், பல்வேறு பள்ளிகளை சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றனர்.  

இதில் பங்கேற்ற வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் பதக்கங்களை இதில் தனிநபர் பிரிவுகளில் 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்களும், குழு பிரிவுகளில் 13 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 23 பதக்கங்களும் என மொத்தம் 40 பதக்கங்களை வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் வென்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சியாளருக்கும் பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும்,  தனிநபர் பிரிவில் பதக்கங்களை பெற்ற  வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவ, மாணவியர்  அடுத்து நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர்.

Tags : Fencing Competition ,Agathiya , District Fencing Competition Agathiya School Students Record: 40 medals won
× RELATED காஞ்சிபுரம் விஷார் கிராமத்தில்...