கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்ததால், நாட்டைவிட்டு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என நாடு நாடாக சுற்றிய அவர், சுமார் 51 நாட்களுக்கு பின் நள்ளிரவில் நாடு திரும்பினார். இந்தசூழலில், அரசு பங்களாவில் ராணுவ பாதுகாப்புடன் தங்கியிருக்கும் கோத்தபயவை அதிபர் ரணில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், கோத்தபய தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், துபாயில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்துகள்.’ என்று கூறப் பட்டுள்ளது. கடைசியாக, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜூலை 8ம் தேதி ஜனாதிபதியாக கோத்தபய வெளியிட்ட டிவிட்டே கடைசி பதிவாகும்.