×

எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு ரூ.4.10 கோடி நிதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பணியாளர் சங்கம் நன்றி

சென்னை: தமிழக அரசு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்க மாநில பொது செயலாளர் டேவிட் மகிமை தாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநில அளவில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கென தனி அலுவலகம், ஆணையம் செயல்பட போதுமான நிதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் ஆணையத்துக்கு தனி அலுவலகம் ஒதுக்கி 27 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.

இதற்காக, நிதியாக ரூ.2.30 கோடி உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலர் மற்றும் பணியாளர்கள் என 48 பேரை நியமிக்கப்படுவர். பணியாளர் ஊதியத்திற்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு என மொத்தம் ரூ.4.10 கோடி  ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக, நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சங்கம் தெரிவித்து கொள்கிறது. விடுபட்டுள்ள ஆணையம் தொடர்பான பிற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மிக முக்கியமாக சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் அம்பேத்கரின் மார்பளவு உருவ சிலையை அமைக்க வேண்டும். முதல்வரே அதை திறந்து வைக்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : CM ,Stalin ,SC ,ST , SC, ST Commission, Rs.4.10 Crore Fund, Chief Minister M.K.Stalin, Staff Union, Thanks
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...