×

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றுகள் 15ம் தேதி வழங்கப்படும்

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வு எழுதிய மாணவர்களுக்கான( மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் உள்பட), அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் 15ம் தேதி மதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களின் மூலமாகவும் அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது குறித்து விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Plus 2 original mark sheets will be issued on 15th
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100