×

ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறாரா?

சென்னை, : சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதியுள்ள சரித்திர நாவல், ‘வேள்பாரி’. இதைப் படமாக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் சூர்யா நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியின் ‘விருமன்’ பட விழாவில் சு.வெங்கடேசன் கலந்துகொண்டார். அப்போது சூர்யா, ‘தமிழர்களுடைய மிகப்பெரிய அடையாளம் ‘காவல் கோட்டம்’, ‘வேள்பாரி’. சுவாரஸ்யமான ஒரு பயணத்தை சு.வெங்கடேசனுடன் ஆரம்பித்துவிட்டோம். அதுபற்றி விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.

தற்போது சூர்யாவின் 42வது படத்தை சிவா இயக்கி வருகிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் சரித்திரப் படமான இதை முடித்ததும், பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் நடிக்கும் சூர்யா, அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார். ‘வேள்பாரி’ நாவல் திரைப்படமாவது உறுதியானால், ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகும் என்று தெரிகிறது. இதற்கு முன்பு சு.வெங்கடேசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘காவல் கோட்டம்’ என்ற நாவல், 2012ல் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அரவான்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது.

Tags : surya , Is Suriya acting in Shankar's direction?
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்