சென்னை,: சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்த 109 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 236 கிலோ குட்பா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்பா பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளர். அதன்படி போலீசார் தங்களது காவல் எல்லையில் குட்கா விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 4ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னை மாநகர காவல் எல்லையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்தும், மாவா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 236 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 39 கிலோ மாவா மற்றும் மூலப்பொருட்கள் 1 செல்போன், 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, வேளச் சேரி நேரு நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த 103 கிலோ குட்பா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.