×

பஞ்சாப் பாடகர் மூசேவாலாவை கொன்ற 6வது நபர் கைது

சண்டிகர்: பிரபல பாடகர் மூசேவாலா கடந்த மே 29ம் தேதி பஞ்சாப்பில் உள்ள மான்சா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் செய்தது தெரியவந்தது. அதன்படி குற்றவாளிகளான  பிரியவ்ரத் பௌஜி, காஷிஷ் மற்றும் அங்கித் செர்சா ஆகிய 3 பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மன்பிரீத் சிங் மற்றும் ஜக்ரூப் சிங் ரூபா ஆகிய 2 பேரை பஞ்சாப் போலீசார் சுட்டுக்கொன்றனர். மற்றொரு குற்றவாளியான தீபக் (எ) முண்டி போலீசில் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மேற்கு வங்கம்-நேபாள எல்லையில் பதுங்கி இருந்த தீபக்கை, ஒன்றிய அமைப்புகளுடன் இணைந்து பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : Moosewala , 6th person arrested for murdering Punjabi singer Moosewala
× RELATED பாடகர் மூஸ்சேவாலா படுகொலை...