×

92 பதவிக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1 எழுத்து தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

சென்னை: குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த தேர்வுக்கான முதல்நிலை தேர்வு தேதி நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் தேதியை டிஎன்பிஎஸ்சி நேற்று மாற்றியுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதவாது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்  குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ம் தேதி நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : DNBSC , 3.16 Lakh Candidates Apply for 92 Posts Group 1 Written Exam Date Changed: TNPSC Secretary Notification
× RELATED குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12ஆம்...