×

கூடுதல் மானிய டீசல் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: படகுகள் கரை நிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை நடைபெற்றது.  கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், கைப்பற்றிய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாதந்தோறும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலின் அளவை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தப்பட்டன. 


Tags : Rameswaram Fishermen , Rameswaram Fishermen On Indefinite Strike Demanding Additional Diesel Subsidy: Boats Abandoned
× RELATED இலங்கை கடற்படையை கண்டித்து...