×

எலிசபெத் ராணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் காலமானார். உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். இவரது மறைவையடுத்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.அநேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.




Tags : Kamal Haasan ,Queen Elizabeth , Kamal Haasan condoles death of Queen Elizabeth
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...