சென்னை: ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ். அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர, ஓபிஎஸ் கட்சி பணிகளை மேற்கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே செல்வார், நாங்களும் செல்வோம். யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார்.