மதுரை: கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்தது கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது. கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ காரில் பயணிப்பது தற்போதைய சூழலாக உள்ளது என தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.