×

அரியலூர் அருகே ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் திருமணத்திற்கு வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நாச்சியார் கோயிலை சேர்ந்த சாமிநாதன் என்பவரை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். தா.பழூர் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி எஸ் பி கலைக்கதிரவன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Aikort ,Ariyalur , Court lawyer hacked to death near Ariyalur
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...